முல்லைத்தீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த அரிய வகை உயிரினம்
வீடு ஒன்றிற்குள் அழுங்கு எனும் அரியவகை காட்டு விலங்கினம் உட்புகுந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அவசர தொலைபேசி அழைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து குறித்த வீட்டிற்கு சென்ற கொக்குளாய் பொலிஸார் குறித்த விலங்கினத்தினை பத்திராமக மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். குறித்த அழுங்கினை வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொக்குளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed